பாண்டி.யில் போதைப் பொருள் புழக்கம் .. அதிமுக புகார்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி கடலோரப் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை விறுவிறுப்பாகநடப்பதாக யூனியன் பிரதேச அதிமுக தலைவரும், முன்னாள் முதல் வருமானடி.ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாண்டிச்சேரி நகரம் மற்றும்கனகசெட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை விறுவிறுப்பாகநடக்கிறது.
விடுதலைப் புலிகள் மூலம் இந்தப் போதைப் பொருள் பாண்டிச்சேரிக்கு வருகிறது.பெண்களும் கூட இந்தப் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
பாண்டிச்சேரியிலுள்ள சில ஹோட்டல்களில் சட்டவிரோதமாக காபரே டான்ஸ்நடக்கிறது. இவற்றைத் தடுக்க பாண்டிச்சேரி நிர்வாகம் தவறி விட்டது. அப்படியேஇதுபோன்ற டான்ஸ்களுக்கு அனுமதி தந்தாலும் கூட இரவு 10 மணிக்கு மேல் இவைஇடம் பெறக் கூடாது என்று அரசு உத்தரவிட வேண்டும்.
காந்தி ஜெயந்தியின்போது பாண்டிச்சேரியிலுள்ள சில மதுக் கடைகள் திறந்திருந்தன.இதுபோன்ற நிலைமை எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.