"சரித்திரம் படைக்க கைகோர்க்கும் ஜாதிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபைத் தேர்தலில் எங்கள் தலைமையில் புதிய அணி உருவாகும் என புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழகத்தின்தலைவர் காமாட்சி நாயுடு தெரிவித்துள்ளனர்.

இருவரும் கூட்டாக ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் இருக்கும் இரு திராவிடக் கட்சிகள் தனிக் கட்சி ஆட்சி, கூட்டணி ஆட்சிஎன மக்களைக் குழப்பி வருகின்றன. நாங்கள் புதிய அரசியல் அணியை அமைக்கும்முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த புதியஅணி தமிழகத்தில் ஆட்சி அமைத்து புதிய சரித்திரத்தை உண்டாக்கும்.மீண்டும் முதல்வரானால் தி.மு.க.வை இரண்டு ஆண்டுகளில் ஒழிப்பேன் எனஜெயலலிதா பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தில் எந்த கட்சியையும்அழித்து விடுவோம் என யாரும் பேசக்கூடாது.

எங்களை ஜாதிக் கட்சி என்று கூறுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இதை அவர்கள்நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டுவோம். மேலும்அவர்கள் கட்சிக் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவோம்.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும் மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடுஅவர் பெயரிலேயே நாயுடு என்ற ஜாதிப் பெயரை வைத்துக்கொண்டு ஜாதிக்கட்சிகள்ஆபத்து என்று கூற அவருக்கு எந்த தகுதியும் கிடை.யாது. ஜாதிக் கட்சிகளால் எங்கும்வன்முறை ஏற்படவில்லை என அவர்கள் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+