1000 ரூபாய்க்காக அடுத்தவருக்கு பரீட்சை எழுத வந்தவர்
பெரியகுளம்:
ரூ. 1000 லஞ்சம் வாங்கிக் கொண்டு அடுத்தவருக்காக பரீட்சை எழுத வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அவரை "செட்டப் செய்து அனுப்பி வைத்த டுட்டோரியல் கல்லூரி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்த மாணவர் சதீஷ். இவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்விஅடைந்து விட்டார். அதனால் அக்டோபர் மாத தேர்வு எழுதுவதற்காக டுட்டோரியலில் சேர்ந்து படித்து வந்தார்.ஆனால், அவரது "தலையில் எதுவும் ஏறவில்லை.
இந்நிலையில் அக்டோபர் தேர்வு தொடங்கியது. பெரியகுளம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தேர்வுநடந்து வருகிறது. இத்தேர்வில் மாணவர் சதீசுக்கு பதிலாக செந்தில்குமார் (18) என்ற இளைஞர் பரீட்சை எழுதவந்தார்.
சரியான நேரத்திற்கு வராமல் 10 நிமிடம் தாமதமாக வந்ததால் அவரை ஆசிரியர்கள் விசாரித்தனர். அப்போதுஅவர் முரணான பதிலளித்ததால் சந்தேகம் கொண்டனர்.
தேர்வு எழுத அனுமதிக்க மறுத்ததோடு அந்த இளைஞரை தனியாக அழைத்து விசாரித்தபோது உண்மைவெளியானது.
சதீசுக்கு பதிலாக ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்தது தெரிந்தது. சின்னமனூரில் உள்ள டுட்டோரியல்ஆசிரியர் தேவராஜ், போலியாக ஹால் டிக்கெட் தயார் செய்து கொடுத்து, ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துசெந்தில்குமாரை அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து போலீசில் புகார் கூறப்பட்டது. அதன்பேரில் இளைஞர் செந்தில்குமார் கைது செய்யபட்டார்.இதற்கெல்லாம் காரணமாக டுட்டோரியல் ஆசிரியர் தேவராஜ், மாணவர் சதீஷ் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications