For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபாவளியும், தேவர் ஜெயந்தியும் .. பரபரப்பில் மதுரை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

தீபாவளி மற்றும் தேவர் ஜெயந்தி ஆகியவை அடுத்தடுத்து வருவதால் மதுரை மற்றும்ராமநாதபுரம் மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியின்போது எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம்இருக்காது. பல்வேறு தேவர் சமூக பிரிவின் ஊர்வலம் நடத்துவார்கள். முக்கியநிகழ்ச்சியாக அக்டோபர் 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில்தேவர் குரு பூஜை நடக்கும்.

தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள்கலந்து கொள்வது தற்போது வழக்கமாகியுள்ளது. இம்முறை கலந்து கொள்ளும்முக்கியத் தலைவர்களில் ஒருவர் ஜெயலலிதா.

இதற்கிடையே தீபாவளியும் வருவதால், மதுரையும், ராமநாதபுரமும் பரபரப்பில்உள்ளது. மதுரை நகரில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரபோலீஸ் கமிஷனர் சுப்ரமணியன் இதுகுறித்துக் கூறுகையில், நகர் முழுவதும் 2500போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர அதிரடிப் படைபோலீஸாரும் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.

முக்கிய இடங்களில் போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது. நகரில் புதன்கிழமை முதல்ஒரு வார காலத்திற்கு இரவு ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நான்கு பிரிவினருக்கு அக்டோபர் 30-ம்தேதி ஊர்வலம் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் செல்ல வேண்டியஊர்வலப் பாதையும் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இதற்கிடையே, தென் மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சிகளுக்குசெய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக கூடுதல்டி.ஜி.பி. குமாரசாமி புதன்கிழமை மதுரை வருகிறார்.

இதற்கிடையே, தேவர் குரு பூஜை நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடத்தி முடிக்கஅனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் தங்கவேலுகோரிக்கை விடுத்துள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X