டான்சி: தீர்ப்பை எதிர்த்து ஜெ., சசிகலா அப்பீல்
சென்னை:
டான்சி ஊழல் வழக்கில் தனி நீதிமன்றம் அளித்த மூன்றாண்டு சிறைத் தண்டனையைஎதிர்த்து ஜெயலலிதாவும், சசிகலாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல்செய்துள்ளனர்.
இவ்வழக்கில் தங்களுக்கு எதிராக தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யவேண்டும் என்றும், அதுவரை தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.
அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை விலை குறைத்து வாங்கியதாகவும் அதிகாரதுஷ்பிரயோகம் செய்ததாகவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழிசசிகலா உள்ளிட்ட 6 பேர் மீது தனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 5 பேருக்கு தலா 3ஆண்டு சிறை தண்டனையும், முன்னாள் அமைச்சர் முகமது ஆசீப்புக்கு மட்டும் 2ஆண்டு தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியது.
இத்தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய அவகாசம் அளித்து நவம்பர்7ம் தேதி வரைதண்டனையை தனி நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
அதன்படி ஜெயலலிதாவும், சசிகலாவும் செவ்வாய்கிழமை உயர் நீதிமன்றத்தில் அப்பீல்மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனு புதன் கிழமை நீதிபதி அக்பர் பாஷா காதிரி முன் விசாரணைக்கு வருகிறது.