வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் உடல் அடக்கம்
தர்மபுரி:
காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல், தர்மபுரிமாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம்செய்யப்பட்டது.
தர்மபுரி அருகே உள்ள மலையந்தஹல்லி என்ற ஊரைச் சேர்ந்தவர் கருநீலன். இவர்காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படைப் பிரிவில் பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு ன் காம்ப்பில் சக படை வீரர்களுடன் ஆலோசனையில்ஈடுபட்டிருந்தார். அப்போது தீவிரவாதிகள் மிக நுணுக்கமான முறையில் கழுதைஒன்றில் வெடிகுண்டைக் கட்டி காமிப்பிற்குள் அனுப்பினர்
இந்த கழுதை வெடிகுண்டு வெடித்ததில், கருநீலனும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வீரர்ஒருவரும் இறந்தனர். இதனையடுத்து, கருநீலனின் உடல் காஷ்மீரில் இருந்து விமானம்மூலம் பெங்களூர் கொண்டு வரப்பட்டது.
அங்கிருந்து தர்மபுரி அருகே உள்ள அவரது சொந்த ஊரான மலையந்தஹல்லிக்குஎடுத்து வரப்பட்டது. இங்கு அவரது உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்செய்யப்பட்டது.