தமிழகத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகரிப்பு
கோவை:
தமிழ்நாட்டில் எய்ட்ஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இதுவரை6 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோய்க்கான அறிகுறிகள் உள்ளன என தமிழ்நாடுஎய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் இயக்குநர் கோபாலன் தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களிடம் கோபாலன் கூறியதாவது:
தமிழகத்தில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூடலூர்,சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல், தஞ்சை, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம்,சென்னை, திருச்சி, மதுரை ஆகிய 12 மாவட்டங்களில் எய்ட்ஸ் நோயாளிகள்இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
எனவே, அதிகபட்ச நடவடிக்கை மூலம் எய்ட்சைக் கட்டுப்படுத்த நடவடிக்கைமேற்கொண்டு வருகிறோம்.
தமிழகத்தில் இதுவரை 6 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோய் வருவதற்கான முழுஅறிகுறிகள் உள்ளன. இதில் 200 பேர் கோவையில் உள்ளனர். பொதுமக்களின்ஒத்துழைப்பும், தனி மனித ஒழுக்கம் இல்லாமல் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தஇயலாது. எனவே, இந்த நோயை வருமுன் காப்பதைத் தவிர தற்போது வேறுவழியில்லை.
எய்ட்ஸ் நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கத் தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சித்த மருத்துவத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்றார் அவர்.