திரிகோணமலை தாக்குதல் புலிகளின் சாதனை
சென்னை:
இலங்கை திரிகோணமலையில் சிங்கள கப்பல்களை விடுதலைப்புலிகள் தாக்குதல்நடத்தி மூழ்கடித்தது மகத்தான சாதனை என்று தமிழ் ஈழ விடுதலை அணி பொதுச்செயலாளர் ஈழ வேந்தன் கூறியுள்ளார்.
ஈழத் தமிழர் வாழ்வில் இதுவொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் அவர்தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:
உலகின் தலைசிறந்த 2-வது இயற்கை துறைமுகம் திரிகோணமலை. இதுதான் இந்துமாசமுத்திரத்தின் திறவுகோல் என்று இங்கிலாந்து பிரதமர் லார்டு வெலிங்டன்கூறியிருக்கிறார்.
திரிகோணமலை, தமிழர்களுக்கு சொந்தமான மண். இது இங்கிலாந்து, அமெரிக்ககலை களஞ்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மண்ணை கைப்பற்ற இலங்கையில்ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு சிங்கள அரசும் முயற்சி செய்து வருகிறது.
அதற்காக சிங்களர்களை அங்கே குடியேற்றி தமிழர்களை அழித்து வருகின்றனர். 7-ம்நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் "குடிதனை பெருக்கி நெருக்கமாக வாழ்ந்ததிரிகோணமலை என்று புகழ்ந்து பாடியுள்ளார்.
அங்கு நெருங்கி வாழ்ந்த தமிழன் இப்போது விரட்டியடிக்கப்படுகிறான். பாடல் பெற்றதலமான திரிகோணமாமலை கோவிலுக்கும் கொடுமைகள் சூழ்ந்துள்ளன.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் விடுதலைப் புலிகள் இந்த தாக்குதலைடத்தியுள்ளனர். இது ஈழத் தமிழர் வாழ்வில் ஒரு திருப்புமுனை. தமிழர் வீரத்தை உலகம்உணரத் தொடங்கியிருக்கிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications