இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: ராணுவத்தை உஷார்படுத்துகிறது அமெரிக்கா
வாஷிங்டன்:
பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவருவதால், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம்என்ற அச்சத்தால், பஹ்ரைன், கத்தார் ஆகிய இடங்களில் உள்ள தனது படையைஅமெரிக்கா உஷார்படுத்தியுள்ளது.
அமரிக்க உளவுப் படைக்கு இதுதொடர்பாக தகவல் வந்ததையடுத்து பாதுகாப்புபடையினரை அமெரிக்கா உஷார்படுத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
எந்தச் சூழ்நிலை ஏற்பட்டாலும் அதைச் சமாளிப்பதற்குத் தயார் நிலையில்,பாதுகாப்புப் படையினரை அமெரிக்கா உஷார்படுத்தி வைத்துள்ளது. இருப்பினும்,துருக்கி, இன்சிர்லிக் விமான தளத்தில் உள்ளதனது விமானப்படை வீரர்களை உஷார்நிலையில் வைத்திருக்க அமெரிக்கா உத்தரவிடவில்லை.
பஹ்ரைனில் 1100 அமெரிக்க ராணுவ வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும்தங்கியுள்ளனர். அமெரிக்க ராணுவத்தின் ஐந்தாவது பிரிவைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.அமெரிக்க மத்திய ராணுவத்தின் பல வீரர்கள் இங்குதான் நிறுத்தப்பட்டுளளனர்.கத்தாரில், 50 ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications