தீபாவளி: ஆளுநர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து
சென்னை:
தீபாவளித் திருநாளையொட்டி தமிழக ஆளுநர் பாத்திமா பீவி வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தியில், அறியாமை என்ற இருளை விரட்டி அறிவு என்றவெளிச்சத்தைக் கொடுக்கும் திருநாள் தீபாவளி. இந்த திருநாளில் தமிழக மக்கள்அனைவருக்கும் இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுகூறியிருந்தார்.
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டவாழ்த்துச் செய்தியில், வாழ்க்கை முழுவதும் அன்பு, மகிழ்ச்சி, பாச உணர்வைக்கொண்டு மக்கள் வாழ வேண்டும்.
தமிழர்களுடைய வாழ்வில் இப்போது இருள் சூழ்ந்துள்ளது. தமிழகமே இருளில்மூழ்கிக் கிடக்கிறது. மதம், ஜாதி, சமுதாயம் என்ற பெயரில் தமிழகத்தின் பெருமையைக்குலைக்கும் வகையில், பலர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மாநிலத்தின் அனைத்துப் பகுதியிலும் சட்டம், ஒழுங்கு சீர் கெட்டுக் கிடக்கிறது.தீபாவளிக்குப் பிறகாவது இது மறையட்டும் என்று கூறியிருந்தார்.
பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் கிருபாநிதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,வாஜ்பேய் அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஒரு வருடம் முடிகிற நாளில் தீபாவளிவருகிறது. உலக அரங்கில் இந்தியாவை சூப்பர் பவர் ஆக்கிக் காட்டியது பா.ஜ.க. இந்தமகிழ்ச்சியான நாளில் தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் தமிழக பா.ஜ.க.வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியிருந்தார்.
எம்.ஜி.ஆர். அதிமுக பொதுச் செயலாளர் திருநாவுக்கரசுவும் தீபாவளிவாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications