மனைவி, மகன், மகளை எரித்துக் கொன்ற தொழிலாளி
மதுரை:
மதுரையில் குடும்பப் பிரச்சினையில் ஆத்திரமடைந்த கட்டடத் தொழிலாளி, தனதுமனைவி, குழந்தைகள் உள்பட மூன்று பேரை தீவைத்துக் கொளுத்தினார்.
மதுரையிலுள்ள கோமதிபுரம் என்ற பகுதியில செவ்வாய்க்கிழமை இரவு இந்த கொடூரச்சம்பவம் நடந்தது
குடும்பத்தை எரித்தவர், மகளின் திருமணத்திற்காக, மனைவியிடம் அவரதுபெற்றொரிடமிருந்து பணம் வாங்கி வரச் சொல்லியுள்ளார். மனைவியும் பணம் வாங்கிவந்துள்ளார். ஆனால் பணம் போதவில்லை என்று கூறி மனைவியிடம் அவர் சண்டைபோட்டுள்ளார்.
சண்டை முற்றவே, வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து மனைவி, 20 வயதுமகன், 18 வயது மகள் ஆகியோர் மீது ஊற்றித் தீவைத்துள்ளார். இதில் மகள்அங்கேயே கருகி இறந்தார். மனைவி, மகன் ஆகியோர் அரசு ராஜாஜிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை காலை இறந்தனர்.
இந்த சம்பவத்தில், அந்த நபரும் காயமடைந்தார். அவர் தற்போது ராஜாஜிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications