தற்கொலைக்கு முயன்றார் என்.டி.ஆர். பேத்தி
சென்னை:
ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் பேத்தி குமுதினி சென்னையில் விஷம்குடித்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
என்.டி.ராமாராவின் மூத்த மகன் ஜெய்கிருஷ்ணா. இவருடைய மகள் குமுதினி (29).சென்னை திருவான்மியூர் வால்மீகி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்வசிக்கிறார். இவருடைய கணவர் ஸ்ரீநாத் பிரசாத். 2 குழந்தைகள் உள்ளனர்.
பிரசாத்துக்கும், குமுதினிக்கும் இடையே வரதட்சணை தொடர்பாக அடிக்கடி சண்டைநடக்கும் என்று தெரிகிறது. அதனால், மனைவியை விட்டு பிரிந்து அடையார் சாஸ்திரிநகரில் பிரசாத் தனியாக வசித்து வருகிறார்.
இருந்தாலும் கூட, குமுதினியை அவர் விடுவதில்லை. அடிக்கடி வந்து தகராறு செய்துவந்துள்ளார். புதன் கிழமை காலையிலும் அதேபோல் குமுதினி வீட்டுக்கு வந்த பிரசாத்பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதனால் மனவருத்தமடைந்த குமுதினி விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தானநிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் விஷம் குடித்ததற்கு கணவர் தான் காரணம் என்று போலீசில் புகார்தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து போலீசார் ஸ்ரீநாத் பிரசாத்திடம் விசாரித்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications