இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அபுதாபியில் தீபாவளி விருந்து
அபுதாபி:
ஷார்ஜாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளவந்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு, இந்தியத் தூதர் கே.சி.சிங்,செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் தீபாவளி விருந்து கொடுத்தார்.
கேப்டன் செளரவ் கங்குலி தலைமையில் வீரர்கள் அனைவரும் விருந்து நிகழ்ச்சியில்கலந்து கொண்டனர். ஐக்கிய அரபு நாடுகளின் உயர் கல்வி அமைச்சர் ஷேக் நஹாயன்பின் முபாரக் அல் நஹாயனும் விருந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அபுதாபி கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இவர் இருக்கிறார்.
இந்தியா தனது முதல் போட்டியில், இலங்கையிடம் தோல்வியுற்றது. இரண்டாவதுபோட்டியில், ஜிம்பாப்வேயை வென்றது. தற்போது மூன்றாவது போட்டியில்ஜிம்பாப்வேயை வியாழக்கிழமை சந்திக்கிறது. வெள்ளிக்கிழமை தனது இறுதி லீக்போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது.
இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications