கோவை காண்டிராக்டர் வீட்டில் ரூ. 2 லட்சம் நகை திருட்டு
கோவை:
கோவை கட்டிடக் கான்ட்ராக்டர் வீட்டில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 70 பவுன் நகைகொள்ளை போனது.
கோவை கவுண்டம்பாளையம் காந்தி நகரில் குடியிருந்து வருபவர் லத்தீப் (64). இவர்இன்ஜினியராகவும், கட்டடக் காண்டிராக்டராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த 23-ம்தேதி மாலையில் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவையில் உள்ள ஒருமருத்துவமனைக்கு உறவினரைப் பார்க்க வந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி திருடர்கள் இவரது வீட்டின் உள்ளே புகுந்தனர்.வீட்டிலிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் நகையை எடுத்துக் கொண்டுதப்பி விட்டனர்.
மூன்று மணி நேரம் கழித்து வீடு திரும்பிய லத்தீப், வீட்டின் கதவுஉடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பீரோவைப்பார்த்தபோது 70 பவுன் நகை கொள்ளை போனதை அறிந்தார்.
இந்த திருட்டு குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். இந்தசம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications