டான்சி தீர்ப்பு: ஜெ. அப்பீல் மனுவை கோர்ட் ஏற்றது
சென்னை:
டான்சி வழக்கில் தனி நீதிமன்றம் பிறப்பித்த மூன்றாண்டு சிறைத் தண்டனையைஎதிர்த்து ஜெயலலிதா, சசிகலா தொடர்ந்த அப்பீல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம்விசாரணைக்கு ஏற்றது.
இதுதொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கும், சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும்நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
டான்சி ஊழல் வழக்கில் தனி நீதிமன்றம் அளித்த மூன்றாண்டு சிறைத் தண்டனையைஎதிர்த்து ஜெயலலிதாவும், சசிகலாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அப்பீல் செய்தனர்.
தங்களுக்கு எதிராக தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்என்றும், அதுவரை தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும்மனுவில் வலியுறுத்தியிருந்தனர். அதேபோல் இவ்வழக்கில் தண்டனை பெற்றஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூர சுந்தர பாண்டியனும் அப்பீல் மனு தாக்கல் செய்திருந்தார்.
மூன்று பேரின் மனுக்களும் புதன்கிழமை உயர் நீதிமன்ற நீதிபதி அக்பர் பாஷா காதிரிமுன் விசாரணைக்கு வந்தது. மனுக்களை ஏற்ற நீதிபதி அப்துல் காதிரி, அவறறைவிசாரணைக்கு ஏற்றுக் கொண்டார்.
பின்னர் மனுக்கள் மீது விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் வழக்கை நவம்பர் 2ம்தேதிக்கு தள்ளி வைத்தார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்யும் பதில் மனு மீதுடிசம்பர் 2-வது வாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
முன்னதாக, அரசுக்குச் செந்தமான டான்சி நிலத்தை விலை குறைத்து வாங்கியதாகவும்அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரதுதோழி சசிகலா உள்ளிட்ட 6 பேர் மீது தனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 5 பேருக்கு தலா 3ஆண்டு சிறை தண்டனையும், முன்னாள் அமைச்சர் முகமது ஆசீபுக்கு மட்டும் 2ஆண்டு தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியது.
தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய அவகாசம் அளித்து நவம்பர்7ம் தேதி வரைதண்டனையை தனி நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.












Click it and Unblock the Notifications