டான்சி தீர்ப்பு: ஜெ. அப்பீல் மனுவை கோர்ட் ஏற்றது
சென்னை:
டான்சி வழக்கில் தனி நீதிமன்றம் பிறப்பித்த மூன்றாண்டு சிறைத் தண்டனையைஎதிர்த்து ஜெயலலிதா, சசிகலா தொடர்ந்த அப்பீல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம்விசாரணைக்கு ஏற்றது.
இதுதொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கும், சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும்நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
டான்சி ஊழல் வழக்கில் தனி நீதிமன்றம் அளித்த மூன்றாண்டு சிறைத் தண்டனையைஎதிர்த்து ஜெயலலிதாவும், சசிகலாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அப்பீல் செய்தனர்.
தங்களுக்கு எதிராக தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்என்றும், அதுவரை தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும்மனுவில் வலியுறுத்தியிருந்தனர். அதேபோல் இவ்வழக்கில் தண்டனை பெற்றஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூர சுந்தர பாண்டியனும் அப்பீல் மனு தாக்கல் செய்திருந்தார்.
மூன்று பேரின் மனுக்களும் புதன்கிழமை உயர் நீதிமன்ற நீதிபதி அக்பர் பாஷா காதிரிமுன் விசாரணைக்கு வந்தது. மனுக்களை ஏற்ற நீதிபதி அப்துல் காதிரி, அவறறைவிசாரணைக்கு ஏற்றுக் கொண்டார்.
பின்னர் மனுக்கள் மீது விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் வழக்கை நவம்பர் 2ம்தேதிக்கு தள்ளி வைத்தார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்யும் பதில் மனு மீதுடிசம்பர் 2-வது வாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
முன்னதாக, அரசுக்குச் செந்தமான டான்சி நிலத்தை விலை குறைத்து வாங்கியதாகவும்அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரதுதோழி சசிகலா உள்ளிட்ட 6 பேர் மீது தனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 5 பேருக்கு தலா 3ஆண்டு சிறை தண்டனையும், முன்னாள் அமைச்சர் முகமது ஆசீபுக்கு மட்டும் 2ஆண்டு தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியது.
தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய அவகாசம் அளித்து நவம்பர்7ம் தேதி வரைதண்டனையை தனி நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications