டான்சி தீர்ப்பு: ஜெ. அப்பீல் மனுவை கோர்ட் ஏற்றது
சென்னை:
டான்சி வழக்கில் தனி நீதிமன்றம் பிறப்பித்த மூன்றாண்டு சிறைத் தண்டனையைஎதிர்த்து ஜெயலலிதா, சசிகலா தொடர்ந்த அப்பீல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம்விசாரணைக்கு ஏற்றது.
இதுதொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கும், சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும்நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
டான்சி ஊழல் வழக்கில் தனி நீதிமன்றம் அளித்த மூன்றாண்டு சிறைத் தண்டனையைஎதிர்த்து ஜெயலலிதாவும், சசிகலாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அப்பீல் செய்தனர்.
தங்களுக்கு எதிராக தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்என்றும், அதுவரை தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும்மனுவில் வலியுறுத்தியிருந்தனர். அதேபோல் இவ்வழக்கில் தண்டனை பெற்றஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூர சுந்தர பாண்டியனும் அப்பீல் மனு தாக்கல் செய்திருந்தார்.
மூன்று பேரின் மனுக்களும் புதன்கிழமை உயர் நீதிமன்ற நீதிபதி அக்பர் பாஷா காதிரிமுன் விசாரணைக்கு வந்தது. மனுக்களை ஏற்ற நீதிபதி அப்துல் காதிரி, அவறறைவிசாரணைக்கு ஏற்றுக் கொண்டார்.
பின்னர் மனுக்கள் மீது விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் வழக்கை நவம்பர் 2ம்தேதிக்கு தள்ளி வைத்தார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்யும் பதில் மனு மீதுடிசம்பர் 2-வது வாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
முன்னதாக, அரசுக்குச் செந்தமான டான்சி நிலத்தை விலை குறைத்து வாங்கியதாகவும்அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரதுதோழி சசிகலா உள்ளிட்ட 6 பேர் மீது தனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 5 பேருக்கு தலா 3ஆண்டு சிறை தண்டனையும், முன்னாள் அமைச்சர் முகமது ஆசீபுக்கு மட்டும் 2ஆண்டு தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியது.
தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய அவகாசம் அளித்து நவம்பர்7ம் தேதி வரைதண்டனையை தனி நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications