தடை வராமல் இருக்க தாயமங்கலம் போகிறார் ஜெ.
சென்னை:
தேர்தலில் நிற்க தடை விதிக்காமல் இருப்பதற்காக தாயமங்கலம் மாரியம்மன்கோவிலில் ஜெயலலிதாவும், சசிகலாவும் சிறப்பு பூஜை செய்யவுள்ளனர்.
தாயமங்கலம் கோவிலில் நவம்பர் 1ம் தேதி ஜெயலலிதாவும், சசிகலாவும் சிறப்புபூஜையும், யாகமும் நடத்துகின்றனர். தேர்தலில் நிற்க தடை ஏற்படாமல் இருக்கவேண்டி இந்த யாகம் நடத்தப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா 30ம் தேதி முதல் ஒரு வாரம் தென்மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்கிறார். இவருடன் பொதுக்குழு உறுப்பினர்சசிகலாவும் செல்கிறார். இருவரும் ஒரே மேடையில் பேசவும் திட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.
அதற்கு முன்பாக இருவரும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ளதாயமங்கலம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும்,யாகமும் நடத்தி வழிபாடு செய்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலைநிறைவேற்றக் கோரி இந்த கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், யாகமும்நடத்துவது வழக்கம்.
அதன்படி நவம்பர் 1-ம் தேதி இக்கோவிலில் ஜெயலலிதாவும், சசிகலாவும் வந்துயாகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக கட்சி பொருளாளரும்,எம்.பி.யுமான திண்டுக்கல் சீனிவாசன் தாயமங்கலத்தில் முகாமிட்டுள்ளார்.
இந்த வழிபாட்டை முடித்துக் கொண்டு சுற்றுப் பயணத்தை தொடங்க ஜெயலலிதாவும்,சசிகலாவும் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications