For Daily Alerts
Just In
ஆசிரியர் கேலி செய்ததால் மாணவி தற்கொலை
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஆசிரியர் கேலி செய்ததால் மனம் உடைந்தமாணவி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
திருத்தணி அருகே உள்ள நகரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா (16). தனியார்பள்ளிக் கூடம் ஒன்றில் சந்தியா பத்தாவது வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளியில்வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவர் தினமும் சந்தியாவைக் கேலி செய்வார் என்றுதெரிகிறது.
சம்பவத்தன்றும் சந்தியாவை அந்த ஆசிரியர் கேலி செய்துள்ளார். இதனால்அவமானமாக உணர்ந்த சந்தியா, வீடு திரும்பியதும் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
Comments
Story first published: Wednesday, October 25, 2000, 5:30 [IST]