குடிநீர் பிரச்சினையை தீர்த்த இடி
Subscribe to Oneindia Tamil
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை கடும் குடிநீர் பிரச்சினையில் சிக்கிய ஒரு பகுதியில்,பலத்த இடி விழுந்ததில் அங்கு நீர் ஊற்று ஏற்பட்டது. ஊரின் குடிநீர்ப் பிரச்சினையும்தீர்ந்தது.
தருமபுரி மாவட்டம் முழுவதும் கடும் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. மக்கள் கடும்வறட்சியைச் சந்தித்து வருகின்றனர். இந்த வறட்சிக்கு ஊத்தங்கரை அருகேயுள்ளகாட்டேரி பகுதியும் விதி விலக்கில்லை.
இந்த நிலையில் காட்டேரி பகுதியில் திங்கள்கிழமை இரவு மழை பெய்தது. மேலும்பலமான இடியும் விழுந்தது. இதில் தரையில் பெரும் பள்ளம் ஏற்பட்டு அதிலிருந்து நீர்ஊற்றெடுத்து ஓடியது.
இதையடுத்து காட்டேரி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். குடிநீர்ப்பிரச்சினையை தீர்த்த இடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications