ராஜ்குமார் சில தினங்களில் வருவார்.. கர்நாடக அமைச்சர்
பெங்களூர்:
வீரப்பன் கும்பலால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் இன்னும் சில தினங்களில்விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடக காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜுனகார்கே கூறியுள்ளார்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கார்கே பேசுகையில், ராஜ்குமார்கடத்தல் விரைவில் முடிவுக்கு வரும். ராஜ்குமார் விடுதலை தொடர்பாக தமிழகமுதல்வர் கருணாநிதியுடன், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தொலைபேசியில்பேசியுள்ளார். இரு முதல்வர்களும் ராஜ்குமார் விடுதலை குறித்து விரிவாகப் பேசினர்.
இன்னும் சில தினங்களில் ராஜ்குமார் கடத்தல் விவகாரம் முடிவுக்கு வரும். இருப்பினும்எப்போது ராஜ்குமார் விடுதலை ஆவார் என்பதை இப்போதைக்கு சொல்வதற்கில்லை.
நக்கீரன் கோபால் தலைமையிலான தூதுக் குழு காட்டிற்குள் நுழைவதற்காகவீரப்பனிடமிருந்து சிக்னலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளது.
எங்களுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி, நடிகர் ராஜ்குமார் நல்ல உடல் நலத்துடன்இருக்கிறார்.
தூதுக் குழுவில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இருப்பது குறித்துக்கருத்துக் கூற விரும்பவில்லை. எங்களுடையே ஒரே நோக்கம் ராஜ்குமார் பத்திரமாகவிடுதலை ஆக வேண்டும் என்பதே. நெடுமாறன் குறித்துக் கருத்து தெரிவித்துபிரச்சினை ஏற்பட விரும்பவில்லை என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications