ஜெ.சொத்து வழக்கு: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சம்மன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்தவழக்கில் சாட்சியம் அளிக்க வருமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்குசென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ரூ. 66.65 கோடி சொத்து சேர்த்தது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதுசிறப்பு தனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒரு சாட்சி. சாட்சியம் அளிக்க ரஹ்மானுக்குபலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் வரவில்லை. இத நிலையில் நவம்பர் 1, 2ஆகிய தேதிகளில் வழக்கு விசாரணை நடக்கவுள்ளது. அந்த சமயத்தில் ஆஜராகிசாட்சியம் அளிக்குமாறு ரஹ்மானுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
ரஹ்மான் தவிர மேலும் 6 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications