நவ. 15 முதல் இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்
ஷார்ஜா:
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்பது நவம்பர் 15-ம் தேதி முடிவாகும்என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் ராஜ்சிங்துங்கார்பூர் தெரிவித்தார்.
இது தொடர்பாக கல்ப் நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:
இந்திய அணிக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளரை நியமிப்பது என்ற முடிவு இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. இதுவரை கிரெக் சேப்பல், ஜான் ரைட் இருவரிடமும்நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.
மூன்றாவது நபராக மார்ஷிடம் நேர்காணல் நடத்தப்படும். அவர் ஆஸ்திரேலியாவில்உள்ளார். கடைசியில்தான் தன்னையும் நேர்காணல் செய்யவேண்டும் என்று அவர்கேட்டுக் கொண்டார்.
அக்டோபர் 31-ம் தேதிக்குள் அவர் சென்னை வந்து நேர்காணலில் கலந்துகொள்ளவில்லை என்றால் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு அவர்பெயர் பரிசீலிக்கப்படாது.
எது எப்படி இருந்தாலும், நவம்பர் 15-ம் தேதி இந்திய அணியின் பயிற்சியாளர் யார்என்பது முடிவாகிவிடும். ஏனெனில் நவம்பர் 18-ம் தேதி ஜிம்பாப்வேயுடனான 2டெஸ்டுகள் கொண்ட கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.
அத் தொடருக்கு முன்பாகவே நவம்பர் 15-ம் தேதி இந்திய அணிக்குப் புதியபயிற்சியாளர் நியமிக்கப்படுவார். அதற்கு முன் அக்டோபர் 31-ம் தேதி புதியபயிற்சியாளர் நியமிப்பது தொடர்பான அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுவிடும்.
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் நவம்பர் 15-ம் தேதியிலிருந்து தனதுபணியைத் தொடங்குவார்.
தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள கெய்க்வாட், தனது பணியைசிறப்பாகச் செய்து வருகிறார். பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கபில்தேவ் விலகியதைஅடுத்து அவசரகதியில் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார்.
இருப்பினும், தனது பணியை அவர் திறம்படச் செய்து வருகிறார். கெய்க்வாட்திறமையான நபர். வெளிநாட்டுப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டாலும், அவர் வேறுவகையில் பயன்படுத்திக் கொள்ளப்படுவார்.
அவரது திறமையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தேசிய கிரிக்கெட்அகாதெமியில் பணியாற்ற அவருக்கு வாய்ப்பு அளிக்கலாமா என்பது பற்றிஆலோசிக்கப்படும் என்றார் துங்கார்பூர்.
யு.என்.ஐ.