பக்தர்கள் முதுகில் பூசாரி நடந்தால் ...
கோவை:
கோவை அருகே "படுகளம் என்ற கோயில் விழா நடந்தது.விழாவில் பெண்களும் குழந்தைகளும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம் என்ற கிராமத்தில்மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில்ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசித் திருவிழா நடந்து வருகிறது.
விழாவின்போது படுகளம் என்ற நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இந்தஆண்டும் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி அக்டோபர் 26-ம் தேதி இரவு அம்மன் அழைத்தல்நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
மறுநாள் காலையில் பூசாரி அருள் வாக்கு எனப்படும் நிகழ்ச்சிதுவங்கியது. நிகழ்ச்சிக்கு பின்னர் விநாயகருக்கு சிறப்புஅபிஷேகமும், ஆராதனை நிகழ்ச்சியும் நடந்தது.
பின்னர், மகாலட்சுமி அம்மன் கோயில் முன்பாக குழந்தைகள்மற்றும் பெண்கள் தலைகுப்புறப் படுத்து வணங்கினர். அப்போதுபூசாரிக்கு அருள் வந்தது. உச்சகட்டத்தை அது எட்டியதும், தனதுவேண்டுதலுக்கு இணங்க படுத்திருக்கும் பக்தர்களின் முதுகில்பூசாரி நடந்து சென்றார்.
இதனால், தங்களுடைய வேண்டுதல் பலிக்கும் என இந்தக் கிராமமக்கள் முழுமையாக நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications