For Daily Alerts
Just In
காஷ்மீரில் 12 பாக். வீரர்கள் பலி
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் நெளவ்ஷேரா பிரிவில் இந்திய பாதுகாப்பு நிலையைத் தாக்கமுயன்ற 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தப் பிரிவில் ஊடுறுவ முயன்றனர். இந்திய பாதுகாப்புநிலையைத் தாக்கவும் முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 12 பாகிஸ்தான் வீரர்கள்கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
இந்தியத் தரப்பில் ஒரு வீரர் காயமடைந்தார். தப்பி ஓடிய பாகிஸ்தான் வீரர்கள்தங்களிடமிருந்த ஏராளமான ஆயுதங்களை அப்படியே விட்டு விட்டுச் சென்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, October 28, 2000, 5:30 [IST]