For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

104 பேர் வாங்கிய லாட்டரிக்கு ரூ.5 கோடி

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

தமிழக அரசு நடத்திய தீபாவளி சிறப்புக் குலுக்கலில் 104 பேர் இணைந்து கூட்டாக வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு ரூ. 5 கோடி பரிசு கிடைத்துள்ளது.

தமிழ்நாடு அரசு தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பரிசாக ரூ. 5 கோடி ரூபாய் பரிசு சீட்டு ஒன்றை வெளியிட்டது. தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டஇந்தப் பரிசு சீட்டுக் குலுக்கல் அக்டோபர் 27ம் தேதி நடந்தது.

திருச்சியில் விற்பனை செய்யப்பட்ட பரிசுச் சீட்டுக்கு முதல் பரிசு ரூ. 5 கோடி விழுந்துள்ளது. இந்த டிக்கெட்டை பொள்ளாச்சியைச் சேர்ந்த 104 பேர் கூட்டாகவாங்கியுள்ளனர்.

பொள்ளாச்சியில் ஆர்.டி.ஓ அலுவலக கன்சல்டிங் வேலை செய்து வரும் தண்டபாணி, பழனிச்சாமி ஆகியோர் இந்த சீட்டை திருச்சியில் உள்ள ராமதாசிடம்மணியாடர் செய்து பெற்றனர்.

முதலில் 6 பேராகத் துவங்கிய இந்தக் கூட்டணி, தீபாவளி நெருங்கும் சமயத்தில் 104 பேராக மாறியது. இந்தக் கூட்டணியினருக்கு தீபாவளிக்கு முந்தையநாளில் இந்த டிக்கெட்டுகள் கிடைத்துள்ளது.

104 பேரும் தலா 50 ரூபாய் வீதம் சேர்த்து மொத்தமாக மணியார்டர் செய்து 101 லாட்டரிச் சீட்டுகளை வாங்கினர். இதில் பி.ஏ 419160 என்றஎண்ணுள்ள சீட்டிற்கு 5 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது. இந்த சீட்டை அனைவரும் ஒன்று சேர்ந்து யூனியன் பாங்க்கில் சனிக்கிழமை டெபாசிட் செய்தனர்.

இவர்கள் அனைவரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் வேலை பார்ப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X