குர்ஸ்க் மீது வெளிநாட்டுக் கப்பல் மோதியது .. கூறுகிறது ரஷியா
மாஸ்கோ:
ரஷ்யாவில் சமீபத்தில் நீரில் மூழ்கிய அணு நீர்மூழ்கிக் கப்பல் மீது, எதிரே வந்த வெளிநாட்டுக் கப்பல் மோதியதால் தான் விபத்துக்குள்ளானது என்றுரஷ்ய கடற்படைத் தளபதி விளாடிமிர் குரோயேதோவ் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் ரஷ்ய அணு நீர்மூழ்கிக் கப்பல் நடுக்கடலில் மூழ்கியது. இதில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த விஞ்ஞானிகள் உள்பட 118 பேர்பலியானார்கள். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கப்பலில் இருந்த 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
இந்த நிலையில், ரஷ்ய கடற்படை தளபதி விளாடிமிர் குரோயேதோவ் கூறுகையில், அணு நீர் மூழ்கிக் கப்பல், எதிரே வந்த வெளிநாட்டு கப்பல் ஒன்றுடன்மோதியதால்தான் விபத்து ஏற்பட்டு கடலில் மூழ்கியது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து எங்களுக்கு சில சாட்சியங்கள் கிடைத்துள்ளன. முழு சாட்சியமும் கிடைத்தவுடன், மோதிய கப்பலின் பெயர் குறித்துத் தெரிவிப்போம். நீர் மூழ்கிக்கப்பலை விபத்துக்குள்ளாக்கிய கப்பல் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது குறித்தும் தெரிவிப்போம் என்று வாய்ஸ் ஆப் ரஷ்யா வானொலிக்கு அளித்தபேட்டியில் கூறியுள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி, அல்கோர் கூறுகையில், ரஷ்ய கடற்படைத் தளபதி விளாடிமிர் கூறுவது போல், பிற நாட்டு கப்பல் மோதியதால் குர்ஸ்க்நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளாகியிருக்கலாம். ஆனால், அதற்கும் அமெரிக்காவுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, இச்சம்பவத்தில் பலியான 118 பேரில் மீட்கப்பட்டவர்கள் தவிர பிறரது சடலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
யு.என்.ஐ.