For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீன துருப்புக்கள் ஊடுருவல்: விசாரிக்க அருணாசல பிரதேசம் சென்றார் ஜார்ஜ் பெர்னான்டஸ்

By Staff
Google Oneindia Tamil News

குவஹாத்தி:

அருணாசல பிரதேச மாநில எல்லைப் பகுதியில் சீன துருப்புக்களின் ஊடுருவல்உள்ளதாகக் கூறப்படும் செய்தி குறித்து விசாரணை நடத்துவதற்காக மத்தியபாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஞாயிற்றுக்கிழமை அருணாசலப்பிரதேசம் சென்றார்.

சில நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் அருணாசலப் பிரதேச முதல்வர் முகுத் மித்திபேசினார். அப்போது சர்வதேச எல்லைக் கோட்டைக் கடந்து அருணாசலப் பிரதேசமாநில எல்லைக்குள் சீன துருப்புகள் ஊடுருவியுள்ளதாக அவர் கூறினார்.

இதையடுத்து அது பற்றி விசாரணை நடத்துவதற்காக ஜார்ஜ் பெர்னான்டஸ்,அருணாசலப் பிரதேசம் விரைந்துள்ளார். அவருடன் உயர் ராணுவ அதிகாரிகளும்சென்றுள்ளனர்.

அருணாசலப் பிரதேச மாநிலம், மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள ரூபா என்றஎல்லையோர நகருக்கு அமைச்சர் சென்றுள்ளார். அப் பகுதியில் உள்ள எல்லைப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் விசாரணைநடத்தப்படும் என்று அமைச்சருடன் வந்துள்ள ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீன துருப்புக்கள் ஊடுருவல் குறித்து விசாரணை நடத்த மத்திய அமைச்சர் அருணாசலப்பிரதேசம் வந்துள்ளது குறித்து அருணாசலப் பிரதேச முதல்வர் மகிழ்ச்சிதெரிவித்துள்ளார்.

1962-ம் ஆண்டு சீனாவுக்கும், இந்தியாவுக்கும் கடும் சண்டை நடந்தது. அருணாசலப்பிரதேச மாநிலத்துக்குள் சீன துருப்புக்கள் வெகு தூரம் ஊடுருவியதை அடுத்து இச்சண்டை நடந்தது. இதில் இருதரப்புக்கும் இடையே கடும் உயிர்ச் சேதம் ஏற்பட்டதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X