பிகார் சிறையில் கடத்தல் பொருட்கள், போதை மருந்து பறிமுதல்
பாட்னா:
பிகார் மாநிலத்தின் மிகப் பெரிய சிறையான பேயுர் சிறையிலிருந்து ஏராளனமானகடத்தல் மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பேயுர் சிறையில் பாட்னா மாவட்ட நிர்வாக அதிகாரிகளும், போலீஸாரும்ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் உள்பட பலருடையஅறைகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள், செல் போன்கள், ஜெனரேட்டர்கள்,கூலர்கள் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சில கைதிகளின் அறைகளில் போதைப் பொருட்களும் இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. அந்த பொருட்கள் எல்லாம் கடத்தல் பொருட்கள் என்றுவிசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அந்த சிறையிலிருந்து 51 தொலைக்காட்சிப் பெட்டிகள், பல செல்போன்கள், ஜெனரேட்டர்கள், கூலர்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தியாவில் உள்ள சிறைகளில் இருந்து இவ்வளவு அதிகமாக கடத்தல் பொருட்கள்பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிகாரின் மிகப்பெரிய சிறையான பேயுர் சிறையில்தான் ஊழல் வழக்கில் கைதானபிகார் மாநில முன்னாள் முதல்வர்கள் லல்லு பிரசாத் யாதவ், ஜகந்நாத் மிஸ்ராபோன்றவர்களும், பல முன்னாள் அமைச்சர்களும் அடைக்கப்பட்டனர் என்பதும்குறிப்பிடத்தக்கது.