For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாழ்ப்பாண தீபகற்பத்தில் கடும் சண்டை: 25 புலிகள் பலி

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையின் வட பகுதியான யாழப்பாண தீபகற்பத்தில் விடுதலைப் புலிகளுக்கும்,இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதுவரை25 புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் நடந்த சண்டையில் இலங்கை ராணுவத்தின் வசம் இருந்தசாவகச்சேரி நகரை புலிகள் கைப்பற்றினர். இப்போது அந்த நகரை மீண்டும் தங்கள்வசம் கொண்டு வரும் வகையில் புலிகள் மீது இலங்கை ராணுவம் புதிய தாக்குதலை (ஆபரேஷன் கனிஹிரா 3)ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது.

ராணுவத்தின் புதிய தாக்குதலை எதிர்த்து புலிகளும் பதில் தாக்குதல் நடத்திவருகின்றனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருவதாகவும்இதில் 25 புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்தது.

மேலும், சாவகச்சேரி பகுதியில் புலிகள் வசம் இருந்த சுமார் 2 சதுர கிலோமீட்டர்பரப்பளவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகவும் ராணுவம்தெரிவித்தது.

ராணுவத்தினருக்கு உதவியாக வான் வழியாகவும் புலிகளின் நிலைகள் மீதுகடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் புலிகளின் பலமறைவிடங்கள் குண்டுவீசி அழிக்கப்பட்டதாவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத்கருணரத்னே தெரிவித்தார்.

தற்போது மட்டுவில் நகரின் வட பகுதியை நோக்கி இலங்கை ராணுவத்தினர் முன்னேறிவருகின்றன. ராணுவத்தினரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த புலிகளும்கடுமையான எதிர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் 3 ராணுவத்தின்காயமடைந்தனர் என்றார் கருணரத்னே.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X