சிறுபான்மை மக்களுக்கு பா.ஜ.க. பாராட்டு
சென்னை:
இந்தியாவில் வாழும் மதச் சிறுபான்மையினர் வழிபாட்டால் வேறுபட்டிருந்தாலும்,பண்பாட்டால், பாரம்பரியத்தால் ஒன்றுபட்டவர்கள் என்று தமிழக பா.ஜ.க.சிறுபான்மையினர் பிரிவுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக பா.ஜ.க. சிறுபான்மையினர் பிரிவு கூட்டம் மாநில தலைமை அலுவலகத்தில்நடந்தது. மாநிலத் தலைவர் டாக்டர் கிருபாநிதி, பொதுச்செயலாளர் இல.கணேசன்ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற கொள்கையில் பா.ஜ.க.அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளது. அத்தகைய ஒற்றுமைக்கு ஒரேபண்பாடே காரணம்.
இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் மதச் சிறுபான்மையினர் வழிபாட்டால்வேறுபட்டிருந்தாலும், பண்பாட்டால், பாரம்பரியத்தால், ரத்தத்தால் தேசிய உணர்வால்ஒன்றுபட்டவர்கள் என்பதில் எந்த சந்தேகம் இல்லை.
நாகபுரியில் நடந்த தேசிய பொதுக்குழுவில் பேசிய பங்காரு லட்சுமணன்,பா.ஜ.க.வின் இத்தகைய சரியான கண்ணோட்டத்தை சிறுபான்மை மக்களிடம் விளக்கிஅவர்களது சந்தேகங்களை போக்க வேண்டும் என்று விடுத்த அறைகூவலைஇக்கூட்டம் வரவேற்கிறது.
தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் சிறுபான்மை சமுதாயத்தின் கட்சி சார்பற்றஅறிஞர்களைக் கூட்டி அவர்களுக்கும் பா.ஜ.க. பிரதிநிதிகளுக்கும் இடையே ஒருகலந்துரையாடலை ஏற்பாடு செய்வது என்றும், சிறுபான்மை மக்களும் தங்களிடம்உள்ள அச்ச உணர்வுகளையும், சந்தேகங்களையும் களைய பா.ஜ.க.வை அணுகிப்பார்க்கவும், அறிந்து கொள்ளவும் முயற்சிக்க வேண்டும் என்றும் இக்கூட்டம்வேண்டுகோள் விடுத்தது.