அருங்காட்சியகம் செல்லும் ஜோதிபாசு அமர்ந்து ஆட்சி செய்த நாற்காலி
கல்கத்தா:
மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அமர்ந்து ஆட்சி செய்த மர நாற்காலியை பத்திரப்படுத்தமாநில அரசு முடிவு செய்துள்ளது.
23 ஆண்டுகாலமாக அசைக்க முடியாத முதல்வராக மேற்கு வங்காளத்தை ஆட்சி செய்துவந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு. அவர் தனது முதல்வர் பதவியைதற்போது ராஜினாமா செய்துள்ளார். புத்ததேவ் பட்டாச்சார்யா முதல்வராக பதவி ஏற்கிறார்.
இந்த நிலையில்,பொதுப்பணித்துறை அமைச்சர் கிஷ்டி கோஸ்வாமி, ஜோதிபாசுஉபயோகப்படுத்திய நாற்காலி பத்திரப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையைசட்டசபைக் கூட்டத்தில் செவ்வாய்க் கிழமையன்று எழுப்பினார்.
முதலில் ஜோதிபாசு, இது தவறான கோரிக்கை என மறுத்தாலும் அமைச்சர்களின்வற்புறுத்தியபின் ஒப்புக் கொண்டார். கோஸ்வாமி தெரிவிக்கையில், ஜோதிபாசுஉபயோகப்படுத்திய நாற்காலி பொதுப் பணித்துறை அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்என்றார்.
இந்த நாற்காலி 23 வருடமாக உபயோகிக்கப்படவில்லை. ஜோதிபாசுவுக்கு 6ஆண்டுகளுக்கு முன்பு கடும் முதுகு வலி ஏற்பட்டபோது மருத்துவர்கள் ஆலோசனைப்படிமுதுகுப்புறம் உயர்ந்த, பஞ்சுகள் வைத்துள்ள இந்த நாற்காலியை உபயோகப்படுத்தத்தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications