கிரிக்கெட் சூதாட்டம்: உ.பி.யில் 13 புக்கிகள் கைது
லக்னெள:
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 13 புக்கிகள் கைதுசெய்யப்பட்டனர்.
தலைநகர் லன்னெள மற்றும் ஆக்ராவில் 6 பேரும், கான்பூரில் ஒரு புக்கியும் கைதுசெய்யப்பட்டனர்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட்போட்டிகள் மீது இவர்கள் சூதாட்டம் ஆடியதாகக் கூறப்படுகிறது.
உ.பி. காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில்இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சுமார் ரூ. 60 லட்சம் முதல் ரூ. 70 லட்சம் வரை இந்த சூதாட்டத்தில் பணம் புரண்டதாகபுக்கிகள் கூறியதாக போலீஸ் கண்காணிப்பாளர் அருண் குமார் தெரிவித்தார்.
லக்னெளவில் ஒருநாள் போட்டிக்கு சூதாட்டத்தின் மூலம் ரூ. 25 லட்சம் முதல் 30லட்சம் வரை வசூலிக்கப்பட்டதாகவும், அதே நேரத்தில் கான்பூரில் ரூ. 50 லட்சம் வரைவசூலிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள புக்கிகள் எல்லாம் சிறிய அளவில் சூதாட்டம்நடத்துபவர்கள். இவர்கள் செல்போன் மூலம் மும்பை, டெல்லி போன்ற நகரங்களில்உள்ள பெரிய சர்வதேச அளவிலான புக்கிகளுடன் தொடர்பு கொண்டு கிரிக்கெட்சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications