For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்குமாரை மீட்பதே முதல் வேலை.. புதிய டி.ஜி.பி.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வீரப்பன் பிடியிலிருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பதுதான் எனது முதல் பணிஎன்று தமிழக புதிய டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.ராஜகோபாலன்கூறியுள்ளார்.

தமிழக டி.ஜி.பியாக இருந்த சர்மா ஓய்வு பெற்றதையடுத்து புதிய டி.ஜி.பியாகராஜகோபாலன் பதவியேற்றுள்ளார். பொறுப்பேற்றுக் கொண்ட பின்செய்தியாளர்களிடம் புதிய டி.ஜி.பி. பேசுகையில், ராஜ்குமார் விரைவல்மீட்கப்படுவார். அவரை மீட்பதுதான் எனது முக்கிய வேலை.

ராஜ்குமார் மீட்பு நடவடிக்கையில் காவல்துறையின் பிற மூத்த அதிகாரிகளுடன் கலந்துஆலோசித்து செயல்படுவேன்.

காவல் துறையில் தமிழ்நாடு போலீஸ் சிறந்து விளங்குகிறது. எனவே ராஜ்குமாரைமீட்க முடியாது என்று கூற முடியாது. விரைவில் அவர் பத்திரமாக மீட்கப்படுவார்.

காவல்துறையை நவீனப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

தமிழக போலீஸை கடமை தவறாத, கண்ணியம் மிக்க போலீஸ் என்ற நிலைக்குக்கொண்டு வர பாடுபடுவேன் என்றார் ராஜகோபாலன்.

1965-ஆண்டு தமிழக காவல்துறையில் பணியைத் துவக்கியவர் ராஜகோபாலன்.டி.ஜி.பி. அந்தஸ்தில் இதுவரை தமிழக காவல்துறை வீட்டு வசதிக் கழகத்தின்தலைவராக 1997-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சென்னை நகர காவல்துறை ஆணையராகஇருந்தார். பிறகு சி.பி.ஐயில் சில காலம் பணியாற்றினார்.

காவல்துறைக்கு வருவதற்கு முன்பு ஐந்து ஆண்டுகள் ராணுவத்தில் சேவைபுரிந்துள்ளார். ஓய்வு பெறுவதற்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில், தமிழகடி.ஜி.பியாக உயர்ந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை டி.ஜி.பி. அலுவலகத்தில் நடந்த எளிய நிகழ்ச்சியில், தற்போதையடி.ஜி.பி. சர்மாவிடமிருந்து, ராஜகோபாலன் பொறுப்புகளைப் பெற்றுக் கொண்டார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X