For Daily Alerts
Just In
காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் பலி
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில், ராணுவத்தின் ரோமியோ பிரிவைச் சேர்ந்த வீரர்கள், நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ஆதரவுலஸ்கார் ஈ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் இறந்தனர்.
ராஜோரி மாவட்டம் பெக்ரம்கலா பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக வந்த தகவல்களையடுத்து, ராணுவ வீரர்கள் அங்கேதுப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அப்போது ஆங்காங்கே பதுங்கு குழிகளில் மறைந்திருந்த தீவிரவாதிகளும் திருப்பித் தாக்கினர். இறுதியில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.இச்சம்பவத்தில் ராணுவ வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை.
அப்பகுதியிலிருந்து தீவிரவாதிகள் விட்டுச் சென்ற ஆயுதங்கள், வெடிமருந்துகள், கிரனேட் வெடிகுண்டுகள், வயர்லெஸ் செட்டுக்கள், துண்டுப்பிரசுரங்கள்ஆகியவை கைப்பற்றப்பட்டன.
யு.என்.ஐ.
Story first published: Tuesday, October 31, 2000, 5:30 [IST]