இஸ்ரேல் ஹெலிகாப்டர் தாக்குதலுக்கு பாலஸ்தீனம் கண்டனம்
காசா:
பாலஸ்தீனத்தில் காசா மற்றும் மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல்நடத்துவதற்குப், பாலஸ்தீன அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாலஸ்தீன அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புனித ஸ்தலமான ஜெருசலேம் யாருக்கு என்பதில் இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே மோதல் இருந்துவருகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் வன்முறை வெடித்தது. இஸ்ரேல் ராணுவமும், பாலஸ்தீனர்களும் மோதிவருகின்றனர்.
இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமாக பாலஸ்தீன மக்கள் மீதுதாக்குதல் நடத்தி வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதிகள், அடுக்குமாடிக் கட்டிடங்கள்,அலுவலகங்களை குறி வைத்துத் தாக்குதல் நடத்துகிறார்கள்.
இத்தாக்குதலால் குழந்தைகள் மற்றும் பெண்களின் வாழ்க்கைக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேற்குக்கரையில், அல்பரேக், ராமல்லா, பிட்டோனியா ஆகிய இடங்களிலும், காசாவில் ராபா, கான்யோனிஸ் ஆகியஇடங்களிலும் தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்று பாலஸ்தீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் குறித்து பாலஸ்தீனிய ரேடியோ செய்தியில் , திங்கள்கிழமை இரவு மேற்குக் கரையிலுள்ளநம்லஸ், ராமல்லா, ஹெப்ரான் பகுதிகளிலும், காசாவில் ராபா, கான்யூனிஸ் பகுதிகளிலும், இஸ்ரேல் ராணுவவீரர்கள் ஹெலிக்காப்டர் மூலம் தாக்குதல் நடத்தினர்.
ராமல்லாவில் நடந்த தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இத்தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லைஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications