வங்கிக்கு வரும் முன் உண்டிக்கு வந்த ரூபாய் நோட்டுக்கள்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி:

ரிசர்வ் வங்கி லேட்டஸ்ட்டாக வெளியிட்ட புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இன்னமும் முழுமையாக வங்கிகளுக்கு கூட வந்து சேரவில்லை. அதற்குள்திருப்பதி உண்டியலில் குவியத் துவங்கி விட்டது.

இக்கோவில் உண்டியலில் திங்கள் கிழமை செலுத்தப்பட்ட பணத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருந்ததை கண்டு கோவில்வட்டாரமே ஆச்சரியத்தில் மூழ்கியது.

தீபாவளி ஸ்பெஷல் தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் திரண்டது. தீபாவளியை முன்னிட்டு பள்ளி கல்லூரிகள், அரசுஅலுவலகங்களுக்கு 4 நாட்கள் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க மலை ஏறி வந்துவிட்டனர்.

இதனால் சுவாமி தரிசனத்திற்கு 42 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ரூ.50 செலுத்தி கட்டண சுதர்சன தரிசன முறைக்கே இந்த கதி.தர்ம தரிசன பக்தர்கள் பற்றி கேட்கவே வேண்டாம்.

தீபாவளியை ஒட்டிய 3 நாட்களில் மட்டும் ஒரு கோடியே 45 ஆயிரத்து 20 ஆயிரம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.

கடந்த வெள்ளிக் கிழமையன்று 38,785 பேர் தரிசனம் செய்ததன் மூலம் 36 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயும், சனிக் கிழமையன்று 47,749 பேர் தரிசனம்செய்ததில் 54 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயும், ஞாயிற்றுக் கிழமையன்று 52, 730 பேர் தரிசனம் செய்ததில் 54 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயும் வருவாய்கிடைத்துள்ளது. இந்த மூன்று நாட்களில் தினம் 13 ஆயிரம் பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+