அதிமுக பிரமுகர் கொலை: 7 திமுகவினருக்கு ஆயுள்
சேலம்:
அ.தி.மு.க.,பிரமுகரைக் கொலை செய்த வழக்கில் 7 தி.மு.க.வினருக்கு ஆயுள்தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலம் மின்னம்பள்ளியைச் சேர்ந்தவர் மாயவன் (30). இவர் அ.தி.மு.க.வின் தீவிரஉறுப்பினராகச் செயல்பட்டு வந்தார். மேலும் ஜெயலலிதாப் பேரவைச் செயலராகஇருந்தார். மேலும், உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.
இதனால் தி.மு.க.,வினர் ஆத்திரமடைந்தனர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்தசுப்ரமணியத்திற்கும் முன் விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் 96-ம் ஆண்டு மே மாதம், மாயவன் அயோத்திப்பட்டணம்செல்வதற்காக மின்னம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் தந்தை கிருஷ்ணனுடன் சைக்கிளில்சென்று கொண்டிருந்தார். இவர்களை பழனிச்சாமி மற்றும் சுப்பிரமணி ஆகியோர்வழிமறித்து மிரட்டியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஜெ. பேரவையில் சேர்த்துள்ள ராஜாவைக்கொல்வோம். நீ கண்டு கொள்ளக் கூடாது எனக் கூறினர். இதில் இருதரப்பினருக்கும்தகராறு ஏற்பட்டது. அப்போது பழனிச்சாமி வைத்திருந்த கத்தியால் மாயவனைக்கத்தியால் குத்தினர்.
அப்போது அங்கு வந்த தி.மு.க.வைச் சேர்ந்த சேட்டு, மணி, சிலாக்கு, செல்லக்கண்ணு,பழனிச்சாமி ஆகியோர் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில்மாயவன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏழுபேரைப் போலீசார் கைது செய்து விசாரணைநடத்தினர். வழக்கு சேலம் இரண்டாவது தன்மை நீதிமன்றத்தில் நடந்தது. இந்தவழக்கை விசாரித்த நீதிபதி ஜபருல்லா, ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத்தீர்ப்பளித்தார்.