ஓய்வுபெறுகிறார் டி.ஜி.பி சர்மா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சர்மா செவ்வாய்க்கிழமை ஓய்வு பெறுகிறார். போலீஸ் துறையை விட்டு மனநிறைவோடு விடைபெறுகிறேன் என்றுஅவர் நிருபர்களுக்கு அளித்த கடைசி பேட்டியில் கூறினார்.

இவர் ஓய்வு பெறுவதை முன்னிட்டு இவருக்கு சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வழியனுப்பு விழா நடக்கிறது. அப்போது போலீஸாரின் அணிவகுப்பும்நடக்கிறது.

டிஜிபி சர்மா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

போலீஸ் துறையில் எனது பணிக்காலத்தின் போது எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த பத்திரிக்கையாளர்களுக்கும், தமிழக மக்களுக்கும் எனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

பதவியில் இருக்கும்போது கோவை குண்டுவெடிப்புச் சம்பவம், தென்மாவட்ட சாதிக் கலவரம் போன்ற பெரும் சவால்கள் என் முன் நின்றன.இதையெல்லாம் சமாளித்து தமிழகத்தில் முழு அமைதியைக் கொண்டு வந்துள்ளோம்.

லாக்கப் சாவுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகத்தில் 419 முன்மாதிரி போளுடன், சமூகப் பணிகளையும் இந்த போலீஸ் நிலையபோலீஸார் செய்கிறார்கள். தமிழகத்தில் 65 சதவீத வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

ராஜ்குமார் கடத்தல் சம்பவம் எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. விரைவில் அவர் மீட்கப்பட வேண்டும். நான் மனநிறைவோடுவிடைபெறுகிறேன். அரசியல் போன்ற பொதுவாழ்வு எதிலும் ஈடுபடப்போவதில்லை என்றார் சர்மா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+