For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2003-க்குப் பிறகு ஓய்வு பெற ஸ்டீவ் வாவ் முடிவு

By Staff
Google Oneindia Tamil News

சிட்னி:

தென் ஆப்பிரிக்காவில் 2003-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பைக்கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாகஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவ் வாவ் தெரிவித்தார்.

சிட்னியில் தற்போது நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ள அவர்நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ஆஸ்திரேலிய அணிக்காக நான் நிறைய விளையாடிவிட்டேன். ஓய்வு பெற முடிவுசெய்துவிட்டேன். 2003-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன்.

கிரிக்கெட் விளையாடுவதை நான் இன்னும் விரும்புகிறேன் என்றாலும், அதற்கு ஒருஎல்லையுண்டு. நான் ஓய்வு பெறுவதாக முடிவு செய்துவிட்டேன். இப்போதைக்குஅடுத்த உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன்.

ஆனால், திட்டமிட்டுள்ளேனே தவிர அது பற்றி உறுதியாகக் கூறமுடியாது. அதற்குமுன்பே ஓய்வு பெற்றாலும் பெறலாம். ஓய்வு பெறவேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு என்றார் ஸ்டீவ் வாவ்.

35 வயதான அவர் ஆஸ்திரேலியாவுக்காக 128 டெஸ்ட் மற்றும் 299 ஒருநாள்கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 8,373 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகரன்கள் எடுத்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை அவர்பெற்றுள்ளார். முதலிடத்தில் ஆலன் பார்டர் உள்ளார்.

1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்ஆஸ்திரேலிய அணிக்குத் தலைமை தாங்கி உலகக் கோப்பையை ஸ்டீவ் வென்றுதந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X