கார், ரூ. 50,000 பணத்துடன் தப்பிய திருடர்கள்
சென்னை:
சென்னையில் தொழிலதிபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் ரூ. 50 ஆயிரத்தை திருடிக் கொண்டு புறப்பட்டபோது காவல்காரர் பார்த்து விடவே,அவரை கத்தியால் குத்தி விட்டு தொழிலதிபரின் ஆடம்பர கார் ஒன்றையும் கிளப்பிக் கொண்டு போய் விட்டனர்.
சென்னை திருவான்மியூர் வால்மீகி நகரில் வசிப்பவர் சிவக்குமார் (56). இவர் தண்ணீர் குழாய்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார்.
இவரது மனைவி ஒரு விபத்தில் சிக்கி அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அம்மாவை பார்ப்பதற்காகஅமெரிக்காவில் இருக்கும் மகன் பரத் சென்னை வந்தார். புதன் கிழமை அவர் அமெரிக்கா திரும்புகிறார்.
திங்கள் இரவு வீட்டில் சிவக்குமாரும், அவரது மகன் பரத்தும் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலையில் மர்ம ஆசாமிகள் சிலர் வீட்டுக்குள்புகுந்தனர்.பீரோவில் இருந்த 50 ஆயிரம் பணம், 100 அமெரிக்க டாலர், ஒரு செல்லுலார் போன் ஆகியவற்றைத் திருடிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேவந்தனர்.
அப்போது வாட்ச்மேன் சிங்காரம் விழித்துக் கொண்டார். திருடர்களை பார்த்ததும் திடுக்கிட்டுக் கத்த ஆரம்பித்தார். உடனே அவரது வாயில் கத்தியால்குத்தி மேற்கொண்டு சத்தம் போட முடியாமல் செய்து விட்ட கொள்ளையர்கள், வீட்டு முன்பு நின்றிருந்த ஆடம்பரக் காரையும் கிளப்பிக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.












Click it and Unblock the Notifications