கோவில் தங்கக் கலசம் திருட்டு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற பங்காரு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள தங்க மூலாம் பூசப்பட்ட தாமிரக் கலசம் செவ்வாய்க்கிழமைஇரவு திருடப்பட்டது.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், கோவில் கோபுரத்திலுள்ள இரண்டரை அடி உயரமுள்ள தாமிர கலசத்தை அடையாளம் தெரியாத திருட்டுக் கும்பல் ஒன்றுதிருடிச் சென்று விட்டது. இது நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கலசமாகும்.
இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள கும்பல் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை என்றனர்.
மோப்ப நாய்ப் படையும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்தக் கோவில் காஞ்சி மடத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications