போட்டோகிராபரைத் தாக்கினார் ஜடேஜா
ஜம்மு:
மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சிபிஐயால் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள அஜய்ஜடேஜா, தன்னை புகைப்படம் எடுக்க முயன்ற, பத்திரிகை போட்டோகிராபரைத்தாக்கினார்.
மேட்ச் பிக்ஸிங் குறித்து விசாரணை நடத்திய சிபிஐ தனது விசாரணை அறிக்கையில்அஜய் ஜடேஜா உள்பட 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது மேட்ச் பிக்ஸிங்குற்றச்சாட்டை நிரூபித்துள்ளது.
இந் நிலையில், அஜய் ஜடேஜா ஹரியானா அணி சார்பில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக விளையாடி வருகிறார். ஜம்முவில்உள்ள மவுலானா ஆசாத் நினைவு மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்று வருகிறது.
சிபிஐ அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து அவரிடம் கருத்து கேட்பதற்காக ஜம்முநிருபர்களும், போட்டோகிராபர்களும் சென்றனர். அப்போது சிபிஐ அறிக்கை குறித்துகருத்து தெரிவிக்க ஜடேஜா மறுத்துவிட்டார்.
மேட்ச் பிக்ஸிங் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அப்பாவி, சட்டம் தன்கடமையைச் செய்யும் என்றார் ஜடேஜா.
அப்போது அவரை படம் பிடிக்க போட்டோகிராபர்கள் முயன்றனர். இதனால்,ஆத்திரம் அடைந்த ஜடேஜா, ஒரு போட்டோகிராபரைத் தாக்கினார்.
இதனால் சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது. பின்னர் போலீஸார் அந்தஇடத்திலிருந்து அஜய் ஜடேஜா அழைத்துச் செல்லப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications