இருண்ட எதிர்காலத்தை நோக்கி பாக் ... வருத்தப்படுகிறார் நவாஸ்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் இருண்ட எதிர்காலத்தை நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்றுசிறைவாசம் மேற்கொண்டுள்ள முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்கூறியுள்ளார்.
லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்பை அவரது மனைவி குல்சூம்சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் நவாஸ் இப்படிக் கூறியதாக செய்திநிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், வெள்ளையர் ஆட்சியின்போது, நாடு இருந்தது போலவேஇப்போதும் பாகிஸ்தான் உள்ளது. அப்போது போல இப்போதும் சுதந்திரப்போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.
21-வது நூற்றாண்டில் நாம் நுழைந்துள்ள போதிலும், இன்னும் பாகிஸ்தான் இருண்டபகுதியிலேயே இருந்து கொண்டிருப்பது வருத்தம் தருகிறது. மக்களின் ஆதரவும்,உதவியும் இல்லாமல் ஒரு நாடும் முன்னேற முடியாது.
பாகிஸ்தான் வறுமையில் வாடுகிறது. அதன் மக்கள் பசியில் சாகிறார்கள். ஏழ்மைதலைவிரித்தாடுகிறது. நாணய மதிப்பு படு பாதாளத்தில் உள்ளது. சட்டம், ஒழுங்குசுத்தமாக இல்லை. இத்தனையையும் பார்த்து மக்கள் கொதிப்படைந்து போய் உள்ளனர்என்றார ஷெரீப்.
இதற்கிடையே நாடு முழுவதிலும் முஷாரப் அரசை எதிர்த்துப் பேரணிகள் நடத்தநவாஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.