For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜிதேந்திர பிரசாத் குறித்துக் கவலையில்லை .. கூறுகிறார் சோனியா

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்குத் தன்னை எதிர்த்து ஜிதேந்திர பிரசாத் போட்டியிடுவது குறித்து எவ்வித கவலையும் இல்லை என்றுபெங்களூரில் புதன்கிழமை சோனியாகாந்தி தெரிவித்தார்.

டெல்லியிலிருந்து லட்சத் தீவு செல்லும் வழியில் பெங்களூர் விமானநிலையத்தில் சோனியாகாந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் போட்டிக்கு ஜிதேந்திர பிரசாத் போட்டியிடுவதால் எனக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. காங்கிரஸ் முதல்வர்கள்ஆட்சி புரியும் அனைத்து மாநிலங்களிலும் நல்லாட்சி நடைபெறுகிறது. பாரதிய ஜனதாக் கட்சி முதல்வர்களை விட, காங்கிரஸ் கட்சி முதல்வர்கள் மிகவும்திருப்திகரமாக ஆட்சி நடத்துகின்றனர் என்றார்.

புதிய மாநிலம் சட்டீஸ்கரில் அஜித் ஜோகி முதல்வராக நியமிக்கப்பட்டது குறித்து அவர் எதுவும் கருத்துக் கூறவில்லை.

முன்னதாக, பெங்களூர் விமானநிலையத்தில் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்சி.கே.ஜாபர் ஷெரீப் ஆகியோர் சோனியா காந்தியை வரவேற்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் போட்டி நவம்பர் 12 ம் தேதி நடக்கிறது. இதற்காக மனுத்தாக்கல் கடந்த அக்டோபர் 29 ம் தேதி நடந்தது.ஜிதேந்திர பிரசாத், சோனியா காந்தியை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளார். வேட்மனுவை வாபஸ் பெறும் நாள் நவம்பர் 4 ம் தேதியாகும்.

இந்தியாவில் நேரு குடும்பத்தை எதிர்த்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு ஒருவர் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X