கள்ளச் சாராயம் ..64,000 பெண்கள் கைது
சென்னை:
தமிழ்நாட்டில் இவ்வாண்டில் கள்ளச் சாராயம் காய்ச்சியதாக 64 ஆயிரம் பெண்கள்உட்பட 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசுதெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு:
தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் கள்ளச் சாராய ஒழிப்பு தொடர்பாக 24,484வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 22,243 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 97,120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 லட்சத்து74, 423 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.அவர்களில் 64,003 பேர் பெண்கள்.
இவர்களிடம் இருந்து 35 லட்சத்து 18 ஆயிரத்து 46 லிட்டர் சாராயம், 1 லட்சத்து 81ஆயிரத்து 710 சாராய பாக்கெட்டுகள், 5 லட்சத்து 77ஆயிரத்து 831 லிட்டர் எரிசாராயம், 2 லட்சத்து 80 ஆயிரத்து 619 லிட்டர்கள், 2 லடசத்து 42 ஆயிரம் போலி மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
இவற்றைக் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 4,059 வாகனங்களும் பறிமுதல்செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் மூலம் 12 கோடியே 5 லட்சம் ரூபாய் அபராதமாக அரசுக்குக்கிடைத்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கள்ளச் சாராய ஒழிப்புப் பணிதீவிரப்படுத்தப்பட்டு பல மதுவிலக்கு கரும்புள்ளி கிராமங்களில் வருவாய்த்துறைமற்றும் காவல்துறையினரின் ஒருங்கிணைந்த மறுவாழ்வுத் திட்டங்களினால் நல்லமாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தை கள்ளச் சாராயம் இல்லாத மாவட்டமாக மாற்ற எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலன் அளித்து வருகின்றன. அதே போல திருவண்ணாமலை,கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களையும் மாற்ற மதுவிலக்கு அமல் குழுக்கள்அமைக்கப்பட்டுள்ளன என்று அரசு தெரிவித்துள்ளது.