டான்சி.. ஜெ. மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு
செனனை:
டான்சி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து போடப்பட்டுள்ளஅப்பீல் மனு மீதான விசாரணை முடியும் வரை அதுதொடர்பான விசாரணைகளைஒத்தி வைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல்செய்த மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டது.
ஜெயலலிதா தவிர, அவரது தோழி சசிகலா மற்றும் மேலும் மூன்று பேரும் இந்தமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
டான்சி வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, டான்சி முன்னாள் தலைவரும் நிர்வாகஇயக்குனருமான ஸ்ரீனிவாசன், முன்னாள் அமைச்சர் முகமது ஆசிப், பத்திரப்பதிவாளர் நடராஜன், ஐ.ஏ.எஸ் அதிகாரி கற்பூர சுந்தரபாண்டிய ன் ஆகியோருக்குபோன மாதம், சிறப்பு நீதிமன்றத்தில் 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனைவழங்கப்பட்டது
இந்த தண்டனையை எதிர்த்து போடப்பட்டுள்ள அப்பீல் மனுக்கள் மீதான விசாரணைமுடியும் வரை, அதுதொடர்பான விசாரணையை நிறுத்தி வைக்கக் கோரி ஜெயலலிதாசார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி அக்பர் பாஷா காதரி இந்தமனு மீதான உத்தரவுகளை வெள்ளிக்கிழக்ைகு ஒத்தி வைத்தார்.
முகம்மது ஆசிப்பும் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்குமாறு மனுதாக்கல் செய்திருந்தார். அதற்கான உத்தரவையும் நீதிபதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
யு.என்.ஐ.