இலங்கை மனித குண்டுவெடிப்பு: பலி 24 ஆக உயர்வு
கொழும்பு:
இலங்கையின் வட பகுதியில் கிழக்கு திரிகோணமலை மாவட்டத்தில் தேர்தல் பேரணியில் நடந்த மனித குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆகஉயர்ந்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் முத்தூர் என்ற இடத்தில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் விடுதலைப் புலிகள்மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர்.
இறந்தவர்களில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பெய்துல்லாவும், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசாரும் அடங்குவர்.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு அக்டோபர் 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஆளும் மக்கள் கூட்டணி சார்பில் பெய்துல்லா போட்டியிடவிருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளின் இந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
இத் தாக்குதலை அடுத்து இலங்கையின் வட பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலைக் குலைக்க புலிகள் மேலும் தாக்குதல் நடத்தலாம்என்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் அவர்கள் ஊடுருவலாம் என்ற முன்னெச்சரிக்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தலைநகர் கொழும்புக்குள் 50-க்கும் அதிகமான விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் ஊடுருவியுள்ளதாக தி ஐலாண்டு எந்தபத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications