சுவாமிமலையில் 10-ம் தேதி கும்பாபிஷேகம்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை முருகன் கோவில் கும்பாபிஷேம் இம்மாதம் 10-ம்தேதி நடைபெறுகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடு சுவாமி மலை. கும்பகோணம்அருகே அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகுகும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
2 கோடிரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேகம் இம்மாதம்10-ம் தேதி நடைபெற இருக்கிறது. யாகசாலை பூஜை 6-ம் தேதி முதல் தொடங்கிநடைபெற இருக்கின்றன.
கும்பாபிஷேகத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரப சரஸ்வதி ஸ்வாமிகள்,விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், தருமபுர ஆதினம் உட்பட பல மடாதிபதிகள் கலந்துகொள்கிறார்கள்.
அமைச்சர் தமிழ்குடிமகன்,. த.மா.கா. தலைவர் மூப்பனார், தஞ்சை கலெக்டர்உள்ளிட்ட பல தலைவர்களும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications