உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்தை ஏற்கவேண்டாம் .. விவசாயிகள்
பா.ஜ.க.வும் ஒரு காங்கிரஸே!
உத்திரப் பிரதேசத்தில் கல்யாண் சிங் விலகலுக்குப் பிறகு, ராம் நரேஷ் குப்தா என்பவர், பா.ஜ.க. மேலிடத்தினால் முதல்வராக அமர்த்தப்பட்டார். இந்தராம் நரேஷ் குப்தா, நியாயமாகப் பார்த்தால் ராஜாராம்,
எஸ். டி.எஸ்., போன்றவர்கள் ஆரம்பித்திருக்கும் மூதறிஞர்கள் கட்சியில் இடம் பெறக் கூடிய அளவுக்கு வயதுத் தகுதி உடையவர்.
ஓய்வு பெற்று கவர்னராகப் போக வேண்டிய நேரத்தில் முதல்வரானார். நிர்வாகத்தை கவனிக்கவும் முடியவில்லை: அதிகாரம் செலுத்தவும்தெரியவில்லை; மற்ற கட்சிகளிலிருந்து ஆட்களை இழுக்கும் சாமர்த்தியமும் இல்லை.
உட்கட்சி எதிர்ப்பு பலம் பெறத் தொடங்கியுவுடன், மேலிடம் மீண்டும் குறுக்கிட்டது. காங்கிரஸ் கட்சி பாணியில் அடுத்த முதல்வரையும் மேலிடமேநியமித்திருக்கிறது.
இப்பொழுது வந்திருப்பவர் ராஜ் நாத் சிங். இன்றைய அரசியல் அளவுகோலின்படி சாமர்த்தியசாலி. அதாவது மற்ற கட்சிகளிலிருந்து ஆட்களை இழுத்து விடக்கூடியவர் என்று பெயர் பெற்றிருப்பவர்.
இப்பொழுது பா.ஜ.க. அரசுக்கு உத்திரப் பிரதேசத்தில் இந்தத் திறமை அதிகமாகத் தேவைப்படுகிறது. ஏனென்றால் உத்திரப் பிரதேசத்திலிருந்து,உத்திராஞ்சல் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பிறகு, பா.ஜ.க. கூட்டணியின் மெஜாரிட்டி பலம் மிகவும் குறுகிவிட்டது. எதிர்க்கட்சியைவிட, இரண்டேஅங்கத்தினர்கள்தான். ஆளும் கூட்டணிக்கு கூடுதலாக இருக்கிறார்கள்.
ஆகையால் ஆட்கள் தேவை. இதற்கு ராஜ்நாத் சிங் முதல்வராக இருப்பது மிகவும் உதவும் என்பது பா.ஜ.க. மேலிடத்தின் கொள்கை ரீதியான முடிவு.
உத்திரப் பிரதேசத்தில் இப்படி என்றால், கோவாவில் தங்களால் ஆதரிக்கப்பட்ட முத்லவரை கவிழ்த்து விட்டு, பா.ஜ.க. தானே அரசைக் கைப்பற்றிவிட்டது.
காங்கிரசிலிருந்து உடைந்த பிரிவின் ஆதரவுடன், ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆக, ஆட்சி அமைப்பதிலும் சரி, ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதிலும் சரி, பா.ஜ.க. தர்ம நியாயங்களையெல்லாம் மூட்டை கட்டி ஓர் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டது.
இதனால் இன்று நாட்டில் அகில இந்திய அளவில் இரண்டு காங்கிரஸ் கட்சிகள் இருக்கின்றன. ஒன்று - சோனியாவின் தலைமையில் இயங்குகிறது.இன்னொன்று - பங்காரு லஷ்மண் தலைமையில் இயங்குகிறது.