தமிழகத்துக்கு மீண்டும் கருணாநிதியே முதல்வர்: கோ.சி.மணி
பேராவூரணி:
தமிழகத்தில் மீண்டும் கருணாநிதியே முதல்வராக வந்து இப்போது அடிக்கல் நாட்டப்படுகிற திட்டங்களைத் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் கோ.சி.மணிதெரிவித்தார்.
பேராவூரணி வேதாந்தம் திடலில் அமைச்சர் கோ.சி.மணியின் 69 வது பிறந்தநாள் விழா நடந்தது.
அதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
திமுக அதிக அளவில் சுயமரியாதை வீரர்களை கொண்ட இயக்கமாக விளங்கி வருகிறது. நல்லாட்சி நடத்தி வரும் கருணாநிதியை நாலாந்தர அரசியல்வாதிகள்,குறிப்பாக ஜெயலலிதா போன்றவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.
எந்த ஒரு முன்னாள் அரசியல் தலைவர்களுக்கும் ஏற்படாத நிலை இன்று ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளது. கணக்கிலடங்காத சொத்துக்கள் தனக்குஎப்படி வந்தது என்று ஜெயலலிதா இன்னும் தெளிவாகக் கூறவில்லை.
தேர்தலில் நிற்காமலேயே ஜெயலலிதா முதல்வர் ஆவார் என அதிமுக பொதுக்குழுவில் பேசி இருக்கிறார்கள். அங்கு வந்த தொண்டர்களை ஏமாற்றஜெயலலிதா இவ்வாறு பேசியிருக்கிறார்கள்.
தற்போது அடிக்கல் நாட்டப்படும் திட்டங்கள் அனைத்தையும் கருணாநிதி 5 வது முறையாக முதல்வராக வந்து தொடங்கி வைப்பார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications