For Daily Alerts
Just In
காஞ்சியில் 200 பவுன் நகை கொள்ளை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் வசித்து வரும் டாக்டர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 200 சவரன் நகைகளையும், ரூ.1 லட்சம்பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
நவம்பர் 2 ம் தேதி, டாக்டர் தனது குடும்பத்துடன், திருத்தணியில் நடந்த உறவினர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்று விட்டுத் திரும்பி வந்த போது நகை, பணம்கொள்ளையடிக்கப் பட்டிருப்பது தெரிய வந்தது.
கொள்ளைக்கும்பல் ஜன்னல் கதவுகளை உடைத்து, கொள்ளையில் ஈடுபட்டதாகத் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து டாக்டர் போலீசில் புகார்கொடுத்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு இதே பகுதியில், தோல் நோய் சிகிச்சை நிபுணர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், 45 சவரன் நகைகளைக்கொள்ளையடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, November 4, 2000, 5:30 [IST]